Saturday, 26 March 2011

Sivan Temple, Kallikudi Village at Madurai District in Tamilnadu. 1000 Years Old(aprox)























































அன்புடையீர் வணக்கம்,

 மேலே  நீங்கள்  கண்ட  படத்தில்  இருக்கும்  சிவாலயம்,  மதுரை மாவட்டம் கள்ளிக்குடி  கிராமத்தில் பாண்டிய  மன்னர்களால்  கட்டபட்டது.  இந்த சிவாலயம்  சற்றேரக்குறைய  சுமார் ஆயிரம் ஆண்டுகள்  பழமை வாய்ந்தது. பல நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த சிவாலயம் ஆகம விதிப்படியும் மிகவும் ஆகர்ஷன சக்தி நிறைந்ததாகவும் உள்ளது. இங்கு மூலவர் ஈசுவரன் ஆவார். பல நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோவிலாதலால் தற்பொழுது மிகவும் சிதிலமடைந்துள்ளது. தற்பொழுது  இந்த சிவாலயத்திற்க்கு திரு. சுந்தர மகாலிங்கம் அவர்களும் மற்றும்  திரு. பி்ச்சை அவர்களும் சிவ கைங்கர்யம் செய்து வருகின்றனர். இங்கு மூலவர் ஈசுவரனுக்கு திரு. சுப்பாரெட்டி என்ற சிவ தொண்டர் அழகிய திருவாச்சி செய்து கொடுத்துள்ளார். இந்த சிவாலயத்தில் ஐப்பசி மாத அன்னாபிஷேகம், மகா சிவராத்திரி மற்றும் பிரதோஷவழிபாடு மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 

அன்பர்களே,
நாட்டில் புதிய, புதிய ஆலயங்களை கட்டுவதற்க்கு பதிலாக இதைப் போன்ற தொன்மை நிறைந்த ஆலயங்களை புனரமைக்கலாமே!
 

தொடர்புக்கு:

திரு. சுந்தர மகாலிங்கம்
அலைபேசி எண் 098436 45274.
திரு. பி்ச்சை 
கள்ளிக்குடி  கிராமம். 

செல்லும் வழி:
மதுரையிலிருந்து விருதுநகர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திருமங்கலத்திற்க்கு அடுத்து அமைந்துள்ளது. 

நம சிவாய. 

No comments: